​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோதமாக கச்சா எண்ணெயை திருடியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி - உயிர்பலி அதிகரிக்கும் என அச்சம்

Published : Mar 04, 2023 6:42 AM

சட்டவிரோதமாக கச்சா எண்ணெயை திருடியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி - உயிர்பலி அதிகரிக்கும் என அச்சம்

Mar 04, 2023 6:42 AM

நைஜீரியாவில், கச்சா எண்ணெயை திருடியபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி, அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அங்கு அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ரிவர்ஸ் மாகாணத்தில் ஷெல் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய்க் குழாயில் சிலர் கச்சா எண்ணெய் திருட முயற்சித்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கச்சா எண்ணெய் குழாய் மளமளவென தீப்பற்றி எரிந்தது.