​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் வடமாநிலத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Published : Mar 04, 2023 6:24 AM

தமிழ்நாட்டில் வடமாநிலத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை.. வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Mar 04, 2023 6:24 AM

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக வந்த வதந்திகளை அரசு மறுத்துள்ளது.

அத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் வடமாநிலத் தொழிலாளர்கள் சிறந்த உழைப்பால் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புசெய்து வருவதாகக் கூறினார்.

இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை சந்திக்க பீகார் அரசு அதிகாரிகள் குழு சென்னைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.