​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கியாஸ் டியூபில் கசிவு.. சமையலறையில் பற்றிய தீ.. உடல் கருகி பெண் பரிதாப பலி..!

Published : Mar 03, 2023 10:02 PM

கியாஸ் டியூபில் கசிவு.. சமையலறையில் பற்றிய தீ.. உடல் கருகி பெண் பரிதாப பலி..!

Mar 03, 2023 10:02 PM

காஞ்சிபுரத்தில் சிலிண்டரிலிருந்து அடுப்புக்குச் செல்லும் குழாயில் எரிவாயு கசிவு இருப்பதை உணராமல் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்றவைக்க முயன்றபோது தீப்பற்றி பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மின் நகர் 2வது தெருவைச் சேர்ந்த தீபிகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். காலை அவரது தாயார் கோயிலுக்குச் சென்ற நிலையில், தீபிகா சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் மீது திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர், 90 விழுக்காடு காயங்களுடன் தீபிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிலிண்டரில் இருந்து அடுப்புக்குச் செல்லும் குழாய் சேதமடைந்திருந்ததாகவும் அதிலிருந்து கசிந்த எரிவாயுவில் தீப்பற்றி, தீபிகா மீது பரவியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.