​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
''நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்..'' - டிஜிபி சைலேந்திரபாபு..!

Published : Mar 03, 2023 1:32 PM

''நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்..'' - டிஜிபி சைலேந்திரபாபு..!

Mar 03, 2023 1:32 PM

நிதி நிறுவனங்கள் மூலம் பண மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடியிருப்பதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்,  62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிலிங் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், காவலர்களுக்கு 7 நாள் வேலை என்பதை தற்போது சட்ட திருத்தம் செய்து வாரத்தில் 5 நாட்கள் வேலை என்று மாற்றப்பட்டுள்ளதுடன்,  6-வது நாள் வேலை செய்தால் அதற்கு ஈசிஆர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட முக்கிய நட்களில் மட்டுமே விடுமுறை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.