​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கியூபா நாட்டில் 12 நாட்களாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ.. ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்..!

Published : Mar 03, 2023 6:36 AM

கியூபா நாட்டில் 12 நாட்களாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ.. ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்..!

Mar 03, 2023 6:36 AM

கியூபா நாட்டில் 12 நாட்களாக கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

ஹோல்குயின் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பிப்ரவரி 18ம் தேதி பரவிய காட்டுத் தீ பலத்த காற்றால் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த தீயில், ஏராளமான மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமாகி விட்டன.

இதையடுத்து கியூபா பாதுகாப்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து காட்டுத் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி வருகின்றனர்.