​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 4பேர் கைது..!

Published : Mar 03, 2023 6:23 AM

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 4பேர் கைது..!

Mar 03, 2023 6:23 AM

சென்னை தண்டையார்பேட்டையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை JP கோவில் தெரு பகுதியில்  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த 2பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும்  கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் மற்றொரு மாணவரான யாசின் மற்றும் மாதவரம் மருந்துக் கடை உரிமையாளர் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மோகனிடம் இருந்த போதை மாத்திரைகளை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது