​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்து தகராறு.. பெண்ணை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபர் கைது..!

Published : Mar 02, 2023 5:13 PM

சொத்து தகராறு.. பெண்ணை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபர் கைது..!

Mar 02, 2023 5:13 PM

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே சொத்து தகராறில் பெண்ணை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

மோவூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் அவரது தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று காலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தீபராஜ், கையில் வைத்திருந்த மண் வெட்டியால் மல்லிகாவை வெட்டியதாக கூறப்படுகின்றது. இதில் படுகாயமடைந்த மல்லிகா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.