​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு வெடிபொருளுடன் வந்த நபர் கைது

Published : Mar 02, 2023 2:54 PM

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு வெடிபொருளுடன் வந்த நபர் கைது

Mar 02, 2023 2:54 PM

பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு சூட்கேஸில் வெடிபொருள்களுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

புளோரிடா மாகாணம் சான்போர்டுக்கு செல்ல வந்த 40 வயதான மார்க் மப்லி என்ற நபரின் சூட்கேசில், வெடி பொருள் இருப்பதை குறிப்பதற்கான சமிஞ்ஞை வந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக பரிசோதித்ததில், வெடிக்க தயார் நிலையில் வெடிப் பொருள் (live explosive device) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பாதுகாப்பு படையினரை சந்திக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தியும், நைசாக அவர் நழுவிச் சென்றார். இருப்பினும் வீட்டில் அவர் இருப்பதை கண்டுபிடித்து கைது செய்து, விமானத்தில் வெடிப் பொருளை வைக்க முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.