​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளித் திருவிழா - 15 லட்சம் தீபங்கள் ஏற்றி வைக்கும் பிரம்மாண்டமான சாதனை நிகழ்வை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Published : Oct 22, 2022 6:46 AM

தீபாவளித் திருவிழா - 15 லட்சம் தீபங்கள் ஏற்றி வைக்கும் பிரம்மாண்டமான சாதனை நிகழ்வை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

Oct 22, 2022 6:46 AM

தீபாவளியன்று மாலையில் அயோத்தி நகரில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வைக்கப்படும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பங்கேற்கிறார்.

நாளை மாலை 5 மணிக்கு அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரதமர் மோடி வழிபாடு செய்கிறார். சரயூ நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியிலும் மோடி கலந்துக் கொள்கிறார்.

ராவணனை வென்று ராமன் தமது சொந்த ஊருக்கு வருவதை வரவேற்கும் நிகழ்வாக இதனையடுத்து தீபங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன.

கின்னஸ் சாதனையை முறியடிக்கும் வகையில் சரயூ நதிக்கரையில் சுமார் 15 லட்சம் தீபங்களை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்து வருகிறது.