​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவி தற்கொலை , இழந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை..!

Published : Oct 21, 2022 9:54 PM

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவி தற்கொலை , இழந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை..!

Oct 21, 2022 9:54 PM

சென்னை தண்டையார்பேட்டையில் திருமணமான ஒரே மாதத்தில், காதல் மனைவி தற்கொலை செய்த துக்கம் தாளாமல், கணவனும் தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிலிண்டர்போடும் பணியிலிருந்த ஜெய்சங்கருக்கும், அவரது முறைப்பெண் சாமுண்டீஸ்வரிக்கும் கடந்த மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

சில நாட்களாக சாமுண்டீஸ்வரி மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும், கடந்த 15-ந் தேதி, கணவருடன் தேனிலவிற்கு ஊட்டி சென்றுவிட்டுத் திரும்பிய மறுநாளே, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மனைவி இறந்த துக்கம் தாளாமல், ஜெய்சங்கர் மதுவில் கரப்பான் பூச்சி மருந்தை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.

மயங்கிய நிலையிலிருந்த ஜெயசங்கரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.