​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆவரம்பட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

Published : Oct 21, 2022 9:39 PM

ஆவரம்பட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!

Oct 21, 2022 9:39 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலியானது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவரம்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரி, தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை, வீட்டில் உறங்க வைத்துவிட்டு, மாடியில் காயவைத்த துணிகளை எடுக்கச்சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது கண் விழித்த குழந்தை, தாயை காணாமல் தேடியவாறே, 50 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தொட்டியில் அசைவின்றி கிடந்த குழந்தையை பதறியடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது,  ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.