​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலேசியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமாக உயிரிழப்பு - உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை..!

Published : Oct 21, 2022 8:46 PM

மலேசியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமாக உயிரிழப்பு - உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை..!

Oct 21, 2022 8:46 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, மலேசியாவுக்கு வீட்டு வேலைக்குச்சென்று, மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உடலை, தாயகம் கொண்டு வர, அரசுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

2019-ம் ஆண்டு மலேசியா சென்ற லதா என்ற பெண், கடந்த 19-ம் தேதி, மன்னார்குடியிலுள்ள குடும்பத்தினரை தொடர்புகொண்டு, தன்னை தமிழ்நாட்டிற்கு வர விடாமல், இங்கு அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லதாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த ஏஜெண்ட் முனி, நேற்று அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு லதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லதாவின் கணவர் நாகராஜன், லதா கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம்
உள்ளதாகவும் போலீசில் புகாரளித்துள்ளார்.