​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க வனத்துறையினர் சம்மன்..!

Published : Oct 21, 2022 6:42 PM

எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோப்பில் சிறுத்தை இறந்து கிடந்த விவகாரம் : 2 வாரங்களில் விளக்கமளிக்க வனத்துறையினர் சம்மன்..!

Oct 21, 2022 6:42 PM

தேனி பெரியகுளம் அருகே, சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு மாவட்ட வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கைலாசப்பட்டியில் ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் சில நாட்களுக்கு முன், சிறுத்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தோப்பில் ஆடு கிடை போட்ட அலெக்ஸ்பாண்டியன், தோப்பின் மேலாளர் உள்ளிட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், சிறுத்தை தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்க, ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.