​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர் மீது கடற்படை துப்பாக்கி சூடு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!

Published : Oct 21, 2022 5:56 PM

தமிழக மீனவர் மீது கடற்படை துப்பாக்கி சூடு : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!

Oct 21, 2022 5:56 PM

தமிழக மீனவர்கள் மீது, இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கடற்படையினரின் இந்த செயல் மிகுந்த வருத்தத்துக்கு உரியது என்றும், அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாகவும், அந்த கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளும்படி உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.