​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!

Published : Oct 21, 2022 5:45 PM

பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்த நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!

Oct 21, 2022 5:45 PM

மதுரை கூடல்நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நபர், மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால், மழைநீர் தேங்கியுள்ளது.

நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால் நடந்து சென்ற போது, பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து உயிரிழந்தார்.

வேணுகோபாலின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.