​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்குள் புகுந்த மழை நீர் - வெள்ள நீரில் வந்து குழந்தைகளை தூக்கிச்சென்ற பெற்றோர்..!

Published : Oct 21, 2022 4:47 PM

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்குள் புகுந்த மழை நீர் - வெள்ள நீரில் வந்து குழந்தைகளை தூக்கிச்சென்ற பெற்றோர்..!

Oct 21, 2022 4:47 PM

கனமழையால், தூத்துக்குடி மாவட்டம் நாகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குளம் போல் மழை நீர் தேங்கியது.

80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் மழை நீர் சூழ்ந்து, குழந்தைகள் வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இடுப்பளவு வெள்ள நீரில் நடந்து, பள்ளிக்கு வந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை தூக்கிச்சென்றனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பள்ளியில் இருந்த மழைநீரை வெளியேற்றினர்.