​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கழிவுநீர் தொட்டிக்குள் சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி.!

Published : Oct 21, 2022 4:37 PM



கழிவுநீர் தொட்டிக்குள் சுத்தம் செய்ய இறங்கிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி.!

Oct 21, 2022 4:37 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி, 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததையடுத்து, ஓட்டல் மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியம் கிராண்ட் ஓட்டலில், கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள், இன்று காலை கழிவுத்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறி மூவரும், 30 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவலின்பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர், கழிவுநீரை அகற்றி, மூவரையும் சடலமாக மீட்ட நிலையில், 5 பிரிவுகளின் கீழ், ஓட்டல் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.