​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல் அருகே உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு..!

Published : Oct 21, 2022 4:04 PM



திண்டுக்கல் அருகே உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு..!

Oct 21, 2022 4:04 PM

திண்டுக்கல் அருகே, உயிரிழந்ததாக நம்பப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வீட்டுக்கு வந்ததால், உறவினர்கள் ஆச்சரியமடைந்தனர்.

திண்டுக்கல்லில் கடந்த 17ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கீழே விழுந்து, தலையில் அடிபட்ட நிலையில், அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவர் உயிரிழந்த நிலையில், அடையாளம் தெரியாததால் புகைப்படத்தை சமூகவலைதளங்களில் போலீசார் வெளியிட்டனர்.

இதை பார்த்த பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள், அது தங்களது உறவினரான பழனிச்சாமி என கூறி, உடலை பெற்று சென்று, அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் இறந்ததாக நம்பப்பட்ட பழனிச்சாமி நேற்றிரவு வீடு திரும்பினார்.

சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறி, பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து விட்டு வீடு திரும்பியதாக அவர் தெரிவித்தார்.