​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி - 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த அரசியல் பிரமுகர் மகள் கைது..!

Published : Oct 21, 2022 3:42 PM

தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி - 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த அரசியல் பிரமுகர் மகள் கைது..!

Oct 21, 2022 3:42 PM

நீலகிரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த பண மோசடியில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த அரசியல் பிரமுகரின் மகள் கைது செய்யப்பட்டார். 

மஞ்சூரில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த சாந்தி பிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜு, கேசியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோர் கடந்த 2021 ஆம் ஆண்டு  பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சுமார் 81 வாடிக்கையாளர்களின் கடன் கணக்குகளிலிருந்து ஒரிஜனல் தங்க நகை பாக்கெட்டு எடுத்து விட்டு அதற்கு பதில் போலி நகைகளை வைத்துள்ளனர். 

பின் 43 பாக்கெட் அசல் நகைகளை ஏற்கனவே உள்ள வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களை தயாரித்து, 98 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.