​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதரவற்ற மாணவர்களின் கல்வி செலவுக்காக,பொதுமக்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு நிதி திரட்டிய கல்லூரி பேராசிரியர்..!

Published : Oct 21, 2022 2:42 PM



ஆதரவற்ற மாணவர்களின் கல்வி செலவுக்காக,பொதுமக்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு நிதி திரட்டிய கல்லூரி பேராசிரியர்..!

Oct 21, 2022 2:42 PM

சென்னையை அடுத்த குன்றத்தூரில் ஆதரவற்ற மாணவர்களின் கல்வி செலவுக்காக, பொதுமக்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு, தனியார் கல்லூரி பேராசிரியர் நிதி திரட்டினார். 

செல்வகுமார் என்ற அந்த பேராசிரியர், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் காலணிகளுக்கு பாலிஷ் செய்து, அதில் கிடைக்கும் தொகையை, கல்விச்செலவுக்கு அளித்து வருகிறார்.

குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் பாலிஷ் செய்து அவர் நிதி திரட்டினார். 

செல்வகுமாரின் சேவையை கேள்விப்பட்டு, கோவூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் ரூ.10,000 குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நிதி அளித்தனர்.