​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த ஆய்வாளர் திருமலையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்ட டிஜிபி..!

Published : Oct 21, 2022 12:59 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த ஆய்வாளர் திருமலையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்ட டிஜிபி..!

Oct 21, 2022 12:59 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திருமலை, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த திருமலையை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.