​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுக்கடலில் இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்..!

Published : Oct 21, 2022 12:34 PM

நடுக்கடலில் இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் படுகாயம்..!

Oct 21, 2022 12:34 PM

நடுக்கடலில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சியின் போது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 10 பேர், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்த கடற்படையினர், ஹெலிகாப்டர் மூலம் மீனவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து இராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மீனவர் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.