​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவிட் காரணமாக இந்தியாவில் வழக்கமான தடுப்பூசிகள் பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Published : Oct 21, 2022 7:51 AM

கோவிட் காரணமாக இந்தியாவில் வழக்கமான தடுப்பூசிகள் பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

Oct 21, 2022 7:51 AM

கோவிட் காரணமாக இந்தியாவில் வழக்கமான தடுப்பூசிப் பணிகள் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 9 மாதங்களில்100 கோடி கொரோனா தடுப்பூசிகளையும், 18 மாதங்களில் 200கோடி கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என்றார்.

கோவிட்-19 காரணமாக வழக்கமான நோய்த்தடுப்புச் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மாண்டவியா, அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்.