​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் 5வயது சிறுமி உயிரிழப்பு..!

Published : Oct 21, 2022 7:49 AM



போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் 5வயது சிறுமி உயிரிழப்பு..!

Oct 21, 2022 7:49 AM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் 5வயது சிறுமி உயிரிழந்தார். 

கிளியனூரைச் சேர்ந்த  சஞ்சனா உடல்நலக் குறைவு  காரணமாக உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் ஈச்சங்காடு கணேசன் என்பவரிடம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு சஞ்சனாவின் உடல் கருமையாக மாறியதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர்  மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி  உயிரிழந்தார்.

இதற்கிடையில் சுகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் போலி மருத்துவர் கணேசனை தேடி வருகின்றனர். மேலும் அவரது மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.