​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி எதிரொலி : வேடசந்தூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை..!

Published : Oct 20, 2022 3:55 PM

தீபாவளி எதிரொலி : வேடசந்தூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை..!

Oct 20, 2022 3:55 PM

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. குறைவான அளவிற்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்ததால் ஆடு ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் வரை விலை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 3 மணி நேரத்திலேயே இரண்டரை கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் மாடுகள் விற்பனையானது.