​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் பலி..!

Published : Oct 20, 2022 3:21 PM

தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி உள்ளிட்ட 2 பேர் பலி..!

Oct 20, 2022 3:21 PM

சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது விரைவு ரயில் மோதி, மூதாட்டி உள்ளிட்ட  2 பேர் பலியாகினர். திருவொற்றியூரை சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி சக்தி.

அவருடைய பாட்டி ராஜேஸ்வரியும், ராஜேஸ்வரியின் சகோதரி  ஜெயாம்மாவும், சக்தியின் குழந்தை பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூரில் இருந்து ரயிலில் வந்துள்ளனர்.

அவர்கள் 2 பேரையும் சக்தியும், ராமசந்திரனும் அழைத்து கொண்டு தண்டவாளத்தை கடந்து சென்றனர்.

அப்போது வந்த விரைவு ரயில்  ராஜேஸ்வரி, ஜெயாம்மா மீது மோதியுள்ளது. அவர்களை காப்பாற்ற முயன்ற சக்தி மீதும் ரயில் மோதியுள்ளது.

இதில் சக்தியும், ராஜேஸ்வரியும் பலியான நிலையில், ஜெயாம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.