​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ.5 லட்சம் மோசடி செய்த பெண்..!

Published : Oct 20, 2022 2:59 PM

அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ.5 லட்சம் மோசடி செய்த பெண்..!

Oct 20, 2022 2:59 PM

புதுச்சேரி ஏனாமில், அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக, 5 லட்சம் ரூபாய் பெற்று,போலி பணி நியமன ஆணை வழங்கி, மோசடி செய்த பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

மொக்க மீனாட்சி என்ற பெண், அரசு வேலை வாங்கித்தருவதாக சிலர் கூறியதை அடுத்து, அபர்ணா என்ற இளம்பெண்ணின் தாய், அவரை அணுகியுள்ளார்.

அப்போது தனக்கு கல்வித்துறை அதிகாரிகள் பலரை தெரியும் என மொக்க மீனாட்சி கூறியதை நம்பி, அபர்ணாவின் தாய் 5 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பரில், கல்வித்துறை இயக்குனர் பெயரில் அபர்ணாவுக்கு, பணி நியமன ஆணை வந்துள்ளது.

அதன் மூலம் பணியில் சேர, அதிகாரிகளை அணுகிய போது, அது போலியான ஆணை என்பதை அறிந்த அபர்ணா, போலீசில் புகாரளித்துள்ளார்.