தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானது.
அய்யலூர் ஆட்டுச்சந்தையில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது.
ஆடுகள் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சியடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகளும், வியாபாரிகளும் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
குறைவான அளவிற்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்ததால் ஆடு ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் வரை விலை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 3 மணி நேரத்திலேயே இரண்டரை கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் மாடுகள் விற்பனையானது.