​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய ஏஜன்ட்டை கைது செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள்..!

Published : Oct 20, 2022 8:21 AM

ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய ஏஜன்ட்டை கைது செய்த என்.ஐ.ஏ.அதிகாரிகள்..!

Oct 20, 2022 8:21 AM

உத்தரப் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபரை தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாரணாசியில் பாசித் கலாம் சித்திக் என்ற 24 வயது இளைஞரின் வீடு உள்பட 2 இடங்களை என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஏஜன்ட்டாக செயல்பட்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்ததும், அவர்களைத் தூண்டி விட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்த திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிப்பு தொடர்பாக எழுதப்பட்ட காகிதங்கள், மொபைல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.