மும்பையில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலமாக காவல்துறைக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இதுபற்றி மும்பை போலீசார் கூறும்போது, அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுஹூவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீசாருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் வந்து உள்ளது.
இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.