​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடியிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் - வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் அழிக்கப்பட்டன

Published : Oct 20, 2022 7:31 AM

ரவுடியிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் - வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் அழிக்கப்பட்டன

Oct 20, 2022 7:31 AM

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் பிரபல ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் அடர்ந்த காட்டுப்பகுதியில் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன.

எருமையூரைச் சேர்ந்த ரவுடி சச்சின் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் குற்ற செயல்களில் ஈடுபட சதித்திட்டம் தீட்டுவதாக கிடைத்த தகவலின்பேரில், தாம்பரம்-சோமங்கலம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சச்சின் மற்றும் பரத் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர்.

இதில், பரத் தப்பிச் சென்ற நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்ற சச்சினை தற்காப்பிற்காக துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்த போலீசார், பயங்கர ஆயுதங்கள்-நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.