​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் அமைச்சர் சேகர்பாபு

Published : Oct 20, 2022 7:00 AM

அடுத்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் அமைச்சர் சேகர்பாபு

Oct 20, 2022 7:00 AM

அடுத்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 578 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 2,710 ஏக்கர் நிலம் மற்றும் 3 ஆயிரத்து 566 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறையின் 75 சதவீதம் சட்டமன்ற அறிவிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 25 சதவீத திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.