​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் கல்லை தூக்கிப்போட்டு கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது..!

Published : Oct 20, 2022 6:31 AM



மதுபோதையில் கல்லை தூக்கிப்போட்டு கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது..!

Oct 20, 2022 6:31 AM

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் கல்லை தூக்கிப்போட்டு கட்டிட தொழிலாளியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரனூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த நீலகண்டன், சம்பவத்தன்று பரனூர் சுடுகாடு சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, கொலையாளி குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

நீலகண்டனும் அதே பகுதியை சேர்ந்த பூவரசனும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய சண்டை போட்டதும், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே நிலப்பிரச்சனை இருந்து வந்த நிலையில், மதுபோதையில் இருந்த நீலகண்டன் பூவரசன் குடும்பத்தினரை ஒருமையில் பேசியதால் அவரது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தததும் விசாரணையில் தெரியவந்தது.