காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, சசி தரூர் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், வாக்குப்பெட்டிகளில் அதிகாரப்பூர்வமற்ற முத்திரைகள் இருந்ததாகவும், சசிதரூர் ஆதரவாளர் சல்மான் சோஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால், உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த வாக்குகளை ரத்து செய்யுமாறு, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஆணையர் மதுசூதன் மிஸ்திரியிடம் கோரிக்கை விடுத்த சசி தரூர் ஆதரவாளர்கள், நியாயமான விசாரணை நடத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.