​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆதரவற்ற கால் நடைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஓ.பி.எஸ்..!

Published : Oct 19, 2022 5:20 PM

ஆதரவற்ற கால் நடைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஓ.பி.எஸ்..!

Oct 19, 2022 5:20 PM

ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைளுக்கு பாதுகாப்பு வழங்க கோசாலை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா ? என சட்டப்பேரவையில் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கால்நடைகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கோசாலை அமைக்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.