உலகை வழிநடத்துவதில் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இளைஞர்கள் வெளிநாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக பின் தங்கியிருந்த இந்தியா, தற்போது ஐ - போன்களை கூட தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.