தருமபுரி மாவட்டம் அரூரில் கூட்டுறவு வங்கி ஏடிஎம்மில் கேட்பாரற்று கிடந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
சோரிம்பட்டியை சார்ந்த ஆனந்தன் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்ற போது எந்திரத்தின் மேல் 20 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
அந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த இளைஞரை காவல்துறையினர் பாராட்டினர்.