​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!

Published : Oct 19, 2022 2:17 PM

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!

Oct 19, 2022 2:17 PM

சேலம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கணித ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜலகண்டபுரம் அரசுப்பள்ளி ஆசிரியர் சரவணகுமார் அத்துமீறல் குறித்து மாணவியின் பெற்றோர் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

விசாரணை செய்த போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

அவரை மருத்துவ சோதனைக்கு கொண்டு சென்றபோது தான் குற்றமற்றவர் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.