தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் வாரச்சந்தையில் விலை அதிகரித்துக் காணப்பட்டபோதும் 2 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையிலும் தர்மபுரி மாவட்டம் அரூர் சந்தையிலும் ஆடுகள் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பாலும், ஆடுகளின் வரத்துக்குறைவாலும் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.