சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் இரவுப் பணியில் இரண்டு ஊழியர்கள் இருந்த நிலையில் காலை சுமார் 6 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக வெளியே வந்த ஊழியர்கள் தீயைணப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்த நிலையில் அலுவலகத்தில் இருந்த கணினி, மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.