மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் திறப்பின் எதிரொலியால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் தீவுகளாக காட்சியளித்தன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது.
இதனால், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கீழகுண்டலபாடி உள்ளிட்ட 3 கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.