உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.கே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் 6 லட்சத்திற்கும் அதிகமான ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய கோர்வா ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், உக்ரைன் போர் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.