​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருந்தி வாழ்ந்த ரவுடியை போலீஸ் இன்ஃபார்மர் என நினைத்து கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பல்..!

Published : Oct 19, 2022 7:22 AM

திருந்தி வாழ்ந்த ரவுடியை போலீஸ் இன்ஃபார்மர் என நினைத்து கொலை செய்த மற்றொரு ரவுடி கும்பல்..!

Oct 19, 2022 7:22 AM

சென்னையில், போலீசாருக்கு தகவல் அளிப்பதாக நினைத்து ரவுடியை வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

உட்வார்ப் கால்வாய் ஓரம் வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சடலமிருந்த இடத்திற்கு விரைந்து வந்த ஏழு கிணறு போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற குண்டு சதீஷ் என தெரிய வந்தது.

இந்த வழக்கில் இட்டா அஜித் தலைமையிலான பத்து பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.