நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் 3வயது குழந்தை உள்பட 3பேர் மயிரிழையில் உயிர் தப்பும் வீடியோ வெளியாகி உள்ளது.
சாந்தி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்பட 3பேர் இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சித்த மருத்துவகல்லூரி அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது.
இதில் 3பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் .