மத்தியப்பிரதேசத்தில் தாய் மீது புகார் கூறிய 3வயது சிறுவனுக்கு சாக்லேட் மற்றும் சைக்கிள் தருவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
Burhanpur பகுதியில் Dedhtalai கிராமத்தைச் சேர்ந்த 3வயது சிறுவன் Hamza தான் வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் தாய் மீது புகார் தெரிவித்துள்ளான்.
அப்புகாரில் தன்னுடைய சாக்லேட்டை தாய் திருடி விட்டதாகவும் அதனால் அவரை கைது செய்யும் படியும் மழலை மொழியில் தெரிவித்துள்ளான். சிறுவனது இந்த புகார் சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து அப்புகாருக்கு மாநில உள்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.