​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் பலி.. உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

Published : Oct 18, 2022 9:52 PM

கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து: சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் பலி.. உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

Oct 18, 2022 9:52 PM

உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், சென்னையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலை கேதர்நாத்தில் யாத்ரீகர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர், கருட் சட்டி என்ற பகுதியில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் சென்னையைச் சேர்ந்த தம்பதிகளான பிரேம்குமார், சுஜாதா மற்றும் அவர்களது உறவினரான கலா உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வர, உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.