தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக ஆணையம் நடத்திய விசாரணயின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், துப்பாக்கிச்சூடு குறித்து தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும், பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அப்போதைய நெல்லை சரக ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில் குமார் உட்பட போலீசார் 17 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.