​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் மீது ஏறி காத்தாடி நூலை எடுத்த சிறுவனை மின்சாரம் தாக்கி தீக்காயமடைந்தார்..!

Published : Oct 18, 2022 6:44 PM

ரயில் மீது ஏறி காத்தாடி நூலை எடுத்த சிறுவனை மின்சாரம் தாக்கி தீக்காயமடைந்தார்..!

Oct 18, 2022 6:44 PM

சென்னை தண்டையார்பேட்டையில்,  உயர் அழுத்த மின் கேபிள் மீது மாட்டிக்கொண்ட காத்தாடி நூலை ரயில் மீது ஏறி எடுத்த சிறுவன்,  மின்சாரம் தாக்கி கடுமையான தீக்காயமடைந்தார்.

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நந்தாவின் மகன் விஷ்ணு, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

விஷ்ணு நண்பர்களுடன் சேர்ந்து, காத்தாடி விட்டபோது,  உயர் அழுத்த மின் கேபிளில் நூல்  மாட்டிக்கொண்டது.

நின்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி நூலை எடுக்கும்போது மின்சாரம் தாக்கியதால், சிறுவன் 70 சதவீதம்  தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.