​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மதுபான கடையில் விற்பனை பணம் குறைவது குறித்து கேட்ட மேற்பார்வையாளரை தாக்கிய விற்பனையாளர்..!

Published : Oct 18, 2022 3:12 PM



அரசு மதுபான கடையில் விற்பனை பணம் குறைவது குறித்து கேட்ட மேற்பார்வையாளரை தாக்கிய விற்பனையாளர்..!

Oct 18, 2022 3:12 PM

தஞ்சாவூர் அருகே, அரசு மதுபான கடையில், விற்பனை பணம் 20 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது குறித்து கேட்ட மேற்பார்வையாளரை, கடையின் விற்பனையாளர் தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாங்குடி அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் அழகுராஜா, விற்பனை கணக்கை சரிபார்த்ததில் 20 ஆயிரம் ரூபாய் குறைவது குறித்து விற்பனையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விற்பனையாளர் கோடீஸ்வரன், என்னை திருடன் என சொல்கிறாயா என கேட்டு மேற்பார்வையாளரை தாக்கியுள்ளார்.