​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!

Published : Oct 18, 2022 1:57 PM

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!

Oct 18, 2022 1:57 PM

கடலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அறிவியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆய்வகத்தில் இருந்த ஆசிரியர் தமிழ்செல்வனிடம் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது.

அப்போது ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததால், வீட்டிற்கு சென்ற மாணவி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.